Total Pageviews

Saturday, January 29, 2011

என் கனவில்

எதிர்பார்க்காத போது
எதிரில் வந்து நின்றாய்
ஏங்கி தவிக்கையில் எட்ட
நின்று வேடிக்கை பார்க்கிறாய்
அயர்ச்சியாய்  இருந்தாலும்
கவர்ச்சியான உன் கண்கள்
உன் பிஞ்சு  விரல்களுக்குள் 
என் கை......  விடவில்லை நீ
விழித்து பார்த்தேன் பகலில்லை
புதிர்போடும் உன் புன்னகையை
புரிந்து கொண்டும் பயனில்லை.
மந்திரத்தால் கட்டி போட்டு
மறைந்து நின்றால் என்ன பயன் ?

No comments:

Post a Comment