Total Pageviews

Friday, January 28, 2011

விதியின் கையில் நான் .....

காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும்
மனதில் கவலைகள் குறைவில்லை
ஏக்கத்தில் விட்ட மூச்சு இன்று ஊருக்கே காற்று
காற்றினில் உன் வாசம் வீசும் போது
சுவாசிக்க நினைத்து சுதாரித்து கொண்டேன்
விஷ வாயுவும் அங்கே கலந்து வந்ததால் ,
காற்றை கடிந்து கொள்ளவா ?
 இல்லை காதலை தேடி செல்லவா ?
தூய்மையான உன் அன்பில்
பொய் சேர்ந்தது எப்போது ?
புறக்கணிக்க நினைத்தாலும்
அரவணைத்து நீதானே ....
மறக்க வில்லை மனம்
மன்றாடுவேன் தினம் ....
நீ தேடும்போது நான்
இல்லை உன்னிடம்....
உலகம் அழியும்போது
உன் நினைவு என்னிடம்...
விளையாட்டு பிள்ளை நீ....
விதியின் கையில் நான் .....

No comments:

Post a Comment