உண்மை சில நேரங்களில்
சுட்டுவிடும் பல நேரங்களில்
கெட்டுவிடும் இன்று இங்கே
நான் கேட்ட உண்மை என்னை
சுட்டுவிட்டது வெட்டுபட்ட
இடம் ஆறிவிடும் சுட்டுபட்ட
இடம் நிறம் மாறிவிடும் திசை
தெரியாத பறவைகள் எங்கோ
சந்தித்து கொள்வது போல
நாம் இங்கே சந்தித்து கொண்டோம்
பாதை மாறி பயணம் செய்ய
விரும்பாமல் புது பாதையை
தேர்ந்தெடுத்தோம் கரடு
முரடான பாதையில் கால்கள்
தான் பத்திவிடும் என்று
நினைத்தேன் ஆனால் இங்கே
பத்திவிட்டது மனம் சோதனை கால
பக்தனை போல சோர்ந்து போய்
இருக்கிறேன் கடற்கரையில்
தாகத்துடன் நிற்கிறேன் என்
தாகத்தை தணிக்க இந்த கடல்
தான் வழி காட்ட வேண்டும் .......
சுட்டு விட்ட உண்மை..சுடச் சுட எழுதியிருக்கிறீர்கள் செல்வி....
ReplyDelete